பெண்களை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், பாஜக-வின் மூத்த தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா, அனுமன் மற்றும் மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்துகொண்டபோது பெண்களை சூர்ப்பணகையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது: "இரவில் வீட்டுக்கு கிளம்பும் போது படித்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் போதையில் விழுந்து கிடப்பதை பார்க்கிறேன். காரில் இருந்து இறங்கி, போதையை தெளியவைக்க முயற்சி செய்வேன். பெண்களை நாம் தெய்வமாக பார்க்கிறோம். ஆனால் பெண்கள் அணிந்து வரும் ஆடைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர்கள் சூர்ப்பனகையை போல் தெரிகிறார்கள். கடவுள் உங்களுக்கு நல்ல அழகான உடலை கொடுத்திருக்கிறார். ஆடைகள் அணிவதில் கவனம் தேவை”. இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இவரது பேச்சு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.